நெடுந்தீவு_குறிகட்டுவான்‬ தினமும் 5 படகு சேவைகள்

நெடுந்­தீவு –- குறி­காட்­டுவான் படகுச் சேவை தினமும் ஐந்து தட­வைகள் இடம்­பெ­ற­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. வட­தா­ரகை படகு மீண்டும் சேவை­யை ஆரம்­பித்­துள்­ளது.
குறித்த படகு தினமும் காலை 6.30 மணிக்கும் பகல் 11 மணிக்கும் பிற்­பகல் 3 மணிக்கும் நெடுந்­தீ­வி­லி­ருந்து குறி­காட்­டு­வா­னுக்குச் செல்­ல­வுள்­ள­துடன் பின்னர் அங்­கி­ருந்து நெடுந்­தீ­வுக்கு காலை 8.30 மணிக்கும் பிற்­பகல் 1 மணிக்கும் மாலை 5 மணிக்­கு­மாக தினமும் மூன்று சேவை­கள் நடத்­தப்­ப­ட­வுள்­ளன.
அதே­நேரம் குமு­தினிப் படகு நெடுந்­தீவிலிருந்து காலை 7.15 மணிக்கும் பிற்பகல் 2.30 மணிக்கும், குறி­காட்­டு­வா­னுக்குச் செல்­ல­வுள்­ள­துடன் அங்­கி­ருந்து காலை 9.30 மணிக்கும் பி.ப. 4 மணிக்கும் இரண்டு தட­வைகள் நெடுந்­தீவுக்கு மீண்டும் சேவையை நடத்­த­வுள்­ளது.
வியா­ழக்­கி­ழ­மை­களில் தனியார் பட­குகள் காலை 7.15 மணிக்கும் பிற்­பகல் 2.30 மணிக்கும் குறி­காட்­டுவான் சென்று அங்­கி­ருந்து காலை 9.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் நெடுந்­தீ­வுக்கு சேவையை நடத்தும் அதே­வேளை குறித்த தினங்களில் அரச படகுச் சேவை இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts