காரைநகர் பிரதேச சபையின் ஐ.தே.க. உறுப்பினர் மீது தவிசாளர் தாக்குதல்!



காரை­நகர் பிர­தேச சபையின் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பினர் கணே­ச­பிள்ளை பாலச்­சந்­திரன் மீது
தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பைச் சேர்ந்த தவி­சாளர் வேலா­யுதம் ஆனை­முகன் தாக்­குதல் நடத்­தி­யுள்ளார்.


நேற்று முன்­தினம் நடை­பெற்ற இத் தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக தெரியவரு­வ­தா­வது:

எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க செய­லா­ள­ரினால் 15.12.2014 இல் பிர­தேச சபைக் கூட்டம் நடை­பெ­று­மென அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இதன் போது எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் தவி­சாளர் மீதான குற்­றச்­சாட்­டுகள் பற்றி ஆதா­ரங்­களை முன்­வைத்து விவா­திக்க இருந்­தனர்.

இதை அறிந்த தவி­சாளர் சபை உறுப்­பி­னர்கள் கூட்­டத்­துக்கு வருகை தர முன் தனது சக உறுப்­பினர் ஒரு­வரின் ஒத்­து­ழைப்­புடன் 15 நிமி­டத்தில் சபையை நடத்தி முடித்து 2015ஆம் ஆண்­டுக்­கான பட்­ஜட்டும் எது­வித வாதப் பிர­தி­வா­தங்­களும் இன்றி நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

காலை 10.35க்கு வருகை தந்த உறுப்­பினர் க. பாலச்­சந்­திரன் செய­லா­ள­ரிடம் கூட்டம் சம்­பந்­த­மாக வின­விய போது கூட்டம் முடிந்து விட்­ட­தென அவர் தெரி­வித்தார். இவ்­வி­டயம் தொடர்­பாக உள்ளூ­ராட்சி உதவி ஆணை­யா­ள­ருக்கு தெரி­யப்­ப­டுத்­து­வ­தற்­காக கணே­ச­பிள்ளை பாலச்­சந்­திரன் கணினி மூலம் கடிதம் தட்டச்சு செய்து கொண்டிருந்த போது தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்ட தவி­சாளர், ஆனைமுகன் பாலச்­சந்­திரன் மீது தாக்­குதல் மேற்­கொண்­ட­தா­க அவர் தெரி­வித்­துள்ளார்.

இது தொடர்­பாக மேலும் கருத்­து­ரைத்த கணே­ச­பிள்ளை பாலச்­சந்­திரன், மக்­களின் பணத்தைக் கொள்­ளை­ய­டிக்க தான் ஒருபோதும் துணை நிற்கப் போவதில்லை என்றும் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Recent Posts