கடும் காற்று கடல் கொந்தளிப்பால் நெடுந்தீவு கடற்பயணத்தில் தடை!

நெடுநதீவில் கடும் காற்றும் கடல் கொந்­த­ளிப்பும் மழையும் தொடர்ந்து பெய்து வரு­கின்­ற­மையால்
குறி­காட்­டு­வா­னுக்­கான போக்­கு­வ­ரத்துச் சேவைகள் பாதிப்­ப­டைந்­துள்­ளன.

நேற்று திங்­கட்­கி­ழமை படகு சேவைகள் இடம்­பெ­றா­மை­யால் காலையில் படகுப் பய­ணத்­துக்­கென துறை­மு­கத்­துக்கு வந்த மக்கள் மீண்டும் தமது இடங்­க­ளுக்குச் சென்­று­விட்­டனர்.

கடந்த காலங்­களில் இது­போன்ற நிலை­மைகள் இருந்­த­போதும் தற்­போ­து படகுச் சேவைகள் நிறுத்­தப்­பட்­டது போல் பெரி­ய­ளவில் இடம்­பெ­ற­வில்லை. கால­நிலை சீற்­றத்தால் குமு­தினிப் படகும் சுக்கான் மற்றும் சங்­கிலி ஆகி­யன அறுந்­து­வி­டலாம் என்ற அச்­சத்தால் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. தனியார் பட­கு­களும் சேவைக்குத் தயா­ரில்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

கடந்த ஞாயிற்­றுக்­கிழமை நெடுந்­தீவிலிருந்து வந்த படகு பிற்­பகல் ஒரு மணிக்கு மீண்டும் குறி­கட்­டு­வானில் இருந்து நெடுந்­தீ­வுக்குத் திரும்பி விட்­டதால் அன்­றைய தினம் பிற்­ப­கலில் நெடுந்­தீவுக்கு செல்­ல­வந்த பய­ணிகள் குறி­கட்­டு­வானில் இருந்து ஊருக்குச் செல்­ல­ மு­டி­யாத நிலையில் யாழ்ப்­பா­ணம் திரும்­பி­யுள்­ளனர். படகுச் சேவை­களின் பாதிப்பால் நெடுந்­தீவில் அத்­தி­யா­வ­சிய பொருட்­க­ளுக்குத் தட்­டுப்­பாடு ஏற்­படும் என பொது­மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

கடும் காற்று, கடல் கொந்தளிப்பு, கன மழை என்பவற்றால் நெடுந்தீவு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது

Recent Posts